• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்

இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, சோஷலிஸ்ட் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் நேற்று (18) பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், தற்போதைய விலைவாசி உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக தெரிவித்து, பல்வேறு கோஷங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
 

Leave a Reply