15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை - UAE அரசின் புதிய நடவடிக்கை
இலங்கை
ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளதுடன், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்திய முதலாவது அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட கணக்குகளை உருவாக்குவதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் கீழ் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்களில் பயனர்களின் வயதைச் சரிபார்ப்பதற்கான கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
























