சுங்கவரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் பறிமுதல்
இலங்கை
சுங்கவரி செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கூடிய கொள்கலனுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2026.06.14 அன்று நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில், குளியாப்பிட்டிய குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகள் பெற்ற தகவலின் அடிப்படையில், சுங்க வரி செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனத்துடன் ஒருவரை கைது செய்து, குலியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 41 வயதுடைய ஹொரம்பாவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த கொள்கலன் வாகனத்திலிருந்து 190 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள், 42 மோட்டார் சைக்கிள் சட்டகங்கள் (Chassis), 44 மோட்டார் சைக்கிள் இயந்திரங்கள் (Engines), மிதிவண்டிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள், 06 போர்க் லிப்ட் (Forklift) இயந்திரங்கள், 03 அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் (Excavators), விவசாய உபகரணங்கள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன் வாகனத்தை சோதனை செய்யும் நடவடிக்கைகளுக்காக, குலியாப்பிட்டிய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு உதவியாக குருணாகல் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) சோதனை அதிகாரிகளும் அழைக்கப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குலியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





















