ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை
இலங்கை
டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்குப் பதிவு செய்வதாகக் கூறி, மோசடி நபர்கள் திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் நிதி மோசடிகளை மேற்கொள்வதற்கும் முயற்சிப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ உதவி எண்ணை ஒத்த தொலைபேசி எண்கள் மூலம் தனிநபர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NICs) பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி வருவதாகத் தங்களுக்குப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக திணைக்களம் ஒரு பொது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மோசடி செய்பவர்கள் +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 உள்ளிட்ட தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி தங்களை அதிகாரிகள் என்று பொய்யாகக் கூறி அழைப்பு மேற்கொள்கின்றனர்.
இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள நபர்கள், அரச இலட்சிகனைகள்ப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலியை உருவாக்கி, டிஜிட்டல் அடையாள அட்டை பதிவுக்குத் தேவை என்று கூறி பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி வருகின்றனர்.
டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியது.






















