தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது
இலங்கை
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.





















