• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முறியும் நட்புறவு! நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

இஸ்ரேல் மீண்டும் ஈரானைத் தாக்கினால், இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்கக்கூடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தான் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் அவரிடம், நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், இல்லையென்றால் மிக விரைவில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்' என்று கூறினேன்" என ட்ரம்ப் கூறியதாக முக்கிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பெய்ரூட்டைக் குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

போருக்கான அவசியம் 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், ட்ரம்ப் கூறியதை நெதன்யாகு ஒரு புரிந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும், அவர் தனது விருப்பப்படியே செயல்படுகிறார் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இஸ்ரேலில் அரசியல் ரீதியாகத் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகுவுக்குப் போர் தொடர வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நிலைத்திருக்க ட்ரம்புக்கு இப்போர் முடிவுக்கு வர வேண்டியுள்ளது" என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply