• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு

இலங்கை

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் அழைப்பையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்கேற்புடன் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவையும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றில், பாராட்டினர்.

உக்ரேனின் முக்கிய சர்வதேச ஆதரவாளர்களில் ஒன்றான E3 எனப்படும் முறைசாரா பாதுகாப்பு கூட்டணியைக் கொண்டுள்ள தலைவர்களுடன், புதினுக்கு உக்ரேனியத் தலைவர் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை டவுனிங் தெருவில் ஜெலென்ஸ்கியும் இணைந்தார்.

தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புட்னுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அவர் முன்மொழிந்தார்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
 

Leave a Reply