திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது
இலங்கை
திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்று (08) பிற்பகல் கூடவுள்ளது.
இதன்போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக திறைசேரி தயாரித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் அரசாங்க நிதிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






















