குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை
இலங்கை
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன் ஆகியவை இலங்கை அரசாங்கத்திற்கு தலையாய முன்னுரிமையாக உள்ளது.
அனைத்துத் தரப்பினரும் உச்சபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்து, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.























