யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்தானிகர்
இலங்கை
இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி இந்திய உயர்ஸ்தானிகர் நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுடன் யாழ் மாநகர சபை ஆணையாளர், பிரதம நூலகர், பிரதம உதவி நூலகர் கலந்து சிறப்பித்தனர்.






















