• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கை பிரஜை

பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தனது முன்னாள் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதற்காக 37 வயது இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 21, 2025 அன்று கார்டிஃப் ரிவர்சைடு பகுதியில் உள்ள தெற்கு மோர்கன் பிளேஸில் 32 வயதான நிவுன்ஹெல்லா டோனா நிரோதா கலாப்னி நிவுன்ஹெல்லா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

பெண் மீது தாக்குதல் நடந்த காலப்பகுதியில், பென்ட்வினைச் சேர்ந்த அவரது கணவர் திசாரா வெரகலகே, பல மாதங்களாக நிரோதாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில் கொலை குற்றத்தை வெரகலேஜ் மறுத்ததாகவும் பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதித்த நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வெரகலேஜின் "கொடூரமான சுயநலம்" நிரோதாவின் வாழ்க்கையை நிலைகுலைத்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் ஒரு கார் நிறுத்தத்தில் நடந்ததாகவும், நிரோதா தனது வேலையில் இருந்த ஒரு சக ஊழியரை சந்திக்கத் தொடங்கிய பிறகு தம்பதியினரின் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டதுடன் குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    
 

Leave a Reply