• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

இலங்கை

2025 ஆம் ஆண்டில் அதிக அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 280,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

2025 ஜனவரி 1 ஆம் திகதியிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்ட அமைச்சர், 2,020 கிலோ கிராம் ஹெரேயின், 4,013 கிலோ கிராம் ஐஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன், 15,564 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 43.3 கிலோ கிராம் கொக்கெய்ன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.

இது தவிர இந்தக் காலகட்டத்தில் அதிகாரிகள் 4.8 மில்லியன் போதை மாத்திரைகளையும் 2.1 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்தக் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 281,320 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேநரேம், அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply