• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்

இலங்கை

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன.

இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 20,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உட்பட, சுமார் 28,000 கைதிகள் தடுப்புக் காவலில் உள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி யசந்த கோடகொடவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் முன்மொழியப்பட்ட சட்டம், சந்தேக நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றங்களை அனுமதிக்கும்.

இதனால் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ளும் கைதிகளுக்கான தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது எந்த கட்டமைக்கப்பட்ட வழிமுறையும் இல்லை.

நீண்டகால சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நீதிபதி துரைராஜா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை நீதிமன்றங்கள் சுமார் 1.1 மில்லியன் நிலுவையில் உள்ள வழக்குகளால் நிரம்பியுள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதியின் கீழ் வழக்குகளை தீர்ப்பதற்கான விகிதம் அதிகரித்துள்ளதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கு மேலதிகமாக ஏழு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
 

Leave a Reply