• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி அனுரகுமார இந்தியப் பிரதமருடன் டெல்லியில் சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (19) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார தற்போது 2026 செயற்கை தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புது டெல்லியில் உள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி இன்று 2026 AI தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில் AI தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார செவ்வாய்க்கிழமை (17) புது டெல்லியை சென்றடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply