• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏப்ரலில் நாமலின் வழக்கு விசாரணை

இலங்கை

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 2026 ஏப்ரல் 02 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ​​பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply