• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கலையில் திடீரென அதிவேகத்தில் இயங்கிய எஸ்கலேட்டர் - அச்சத்தில் உறைந்த மாணவர்கள்

பல்கலைக்கழகமொன்றில் இயங்கும் எக்ஸ்கலேட்டர் திடீரென அதிவேகத்தில் இயங்கியதால் அதில் பயணித்த மாணவர்கள் பெரும் அச்சத்தில் ஓட ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் டாக்காவில் உள்ள BRAC பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் இயங்கிக் கொண்டிருந்த எஸ்கலேட்டர் திடீரென வேகமெடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.


குறித்த எஸ்கலேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்பாராத விதமாக எஸ்கலேட்டர் வேகமாகச் சென்றதால், மாணவர்கள் சமநிலையை பராமரிக்க போராடினர். திடீரென எஸ்கலேட்டர் வேகமாக நகர்ந்ததால் காயத்தைத் தவிர்க்க மாணவர்கள் அவசரமாக இறங்கி ஓடினர்.

இந்த சம்பவத்தின் காணொளி, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 

Leave a Reply