• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன.

இலங்கை

இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.
பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான உதவிகள்! அவர்களின் மீட்பு அணியினர், ஹெலிகொப்டர்கள், உதவிப்பொருட்கள்…!
மாலைதீவின் $50,000, நேபாளத்தின் $200,000, அவுஸ்திரேலியாவின் $1,000,000, UAE இல் C-17 இராணுவ விமானங்கள் சுமந்துவரும் பெருமளவு உதவிகள், அமெரிக்காவில் இருந்து நாளை 4 ஆம் திகதி வந்து இறங்கப்போகும் இரண்டு C-130 விமானங்கள், சுவிஸில் இருந்து 5 ஆம் திகதி வரபோகும் மீட்பு அணி என ஏராளமான வெளிநாட்டு உதவிகள்!
இந்த உதவிகள் அனைத்துக்கும் பின்னால் இருப்பது ‘அனுர’ எனும் ஒற்றை மனிதன்மீதான பெரும் நம்பிக்கை. அவரின் ‘ஊழல் அற்ற நிர்வாகத்தின்’ மீதான நம்பிக்கை.
“இவரை நம்பி உதவிப்பொருட்கள் அனுப்பினால், இவர் உரிய மக்களிடம் சேர்ப்பிப்பார்” என்கிற ஒரு clearance தான் இந்த உதவிகள் வந்துகுவியக் காரணம்.
வழக்கமாக தனிநபர்களுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பண உதவிகள், இம்முறை அரசாங்கத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுவதும் அனுரமீதான நம்பிக்கையே..!

மாறாக, மக்களுக்கு வரும் உதவிப்பொருட்களை தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இருந்திருந்தால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அதுதான் கடந்த காலத்தில் நடந்தது.
மக்களுக்கு என அனுப்பப்படும் உணவுப் பொருட்களை, மக்களுக்கு வழங்காமல் களஞ்சியங்களில் சேமித்து வைத்து ‘காலாவதி திகதியே’ காலாவதி ஆனபின்னும் வைச்சு ‘வடிவு’ பார்க்கும் நிர்வாகங்களே கடந்த காலத்தில் இருந்தன.
ஒரு நாட்டில் ‘ஊழல் இல்லாத நிர்வாகம்’ இருந்தால் உலகநாடுகள் அதை விரும்பும். சர்வதேச நன்மதிப்பு ஏற்படும். உதவிகள் குவியும். எல்லாமே சாத்தியமாகும்..!
ஜனாதிபதி அனுர அதை சாதித்துக்காட்டி வருகிறார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அறிவித்த நிவாரணங்களின் தொகுப்பு
🚨 இயற்கை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் இன்று (05) மாலை வெளியிட்ட அறிவிப்புக்கள்....
🚨 சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றும் 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
🚨 பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
🚨 இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🚨 வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும்.
முற்றாக சேதமடைந்துள்ள – மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 லட்சம் ரூபா ……..!
(வெள்ளம், மண்சரிவு இரண்டுக்கும் பொருந்தும்)
🛑அபாய வலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அரச காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிட்டால் காணி வாங்குவதற்கு 50 லட்சம் ரூபாவரை கொடுப்பனவு வழங்கப்படும்.
🛑பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைப்பதற்கு அதிகபட்சமாக 25 லட்சம்ரூபாவரை வழங்கப்படும். (நான்கு கட்டங்களாக இதற்குரிய மதிப்பீடு இடம்பெறும்.)
🛑அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு
🚨 தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
🚨 அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.
🚨பேரிடரால் அழிந்த பதிவு செய்யப்பட்ட மாடுப் பண்ணைகளை மீண்டும் தொடங்க ரூபா 200,000 மானியம்.
🚨முழுமையாக சேதமடைந்த ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுக்கும் ரூபா 400,000 இழப்பீடு.
சேதமடைந்த வணிக கட்டடங்களை மீண்டும் திறக்க
💼 ஒவ்வொரு வணிக கட்டடத்துக்கும் — ரூ. 50 இலட்சம் (Rs. 5 MILLION)
➡️ தொழில் மற்றும் வருமானத்தை மீட்டெடுக்க உதவும் முக்கிய உதவி வழங்கப்படும்
🚨காய்கறி பயிர்செய்கையை மீண்டும் தொடங்க ஒரு ஹெக்டேருக்கு ரூபா. 200,000.
🚨பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திறைசேரியிலிருந்து ரூபா 15,000 மற்றும் ஜனாதிபதி நிதியிலிருந்து Rs. 10,000. ரூபா வழங்கப்படும்
🚨நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணப் பணிகளுக்காக 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 

 

Leave a Reply