வெள்ள நீரில் ஆபத்தான பயணம் - பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்
இலங்கை
கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை (03) ஆணையகத்தின் முன் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களின் தவறான நடத்தை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, பேருந்து வழித்தட அனுமதி இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடத்துனர் மற்றும் சாரதி ஒரு மாத காலத்திற்கு சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.






















