அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
இலங்கை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இந்தக் கூட்டத்தை அறிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.























