மக்கள் திலகத்துடனான நட்பு பற்றி நமது நடிகர் திலகம்
சினிமா
மதுரை ஸ்ரீபாலகான சபா ' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம்...
நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம் ஜி ஆர் வீடு இருந்தது...
காலையிலும் நாடகம் முடிந்த பின்னும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன்...
அவரது அம்மா என்னையும் அவரது மகனாக எண்ணிப் பழகியதை என்றும் என்னால் மறக்க முடியாது...
இருமலர்களால் தொடுக்கப்பட்ட எங்கள் இருவரின் நட்பைப் பற்றிச்
சொல்ல வேண்டுமானால்...
தெய்வக் கவி திரு. கண்ணதாசன்
அவர்கள் எழுதிய...
' நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி
நடந்த இளந்தென்றலே...
கண்ணின் மணி போல
மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா...
இந்த மண்ணும்
கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா...
உறவை
பிரிக்க முடியாதடா '
என்பதைப் போன்றது...
தினமும் காலையில்
உடற்பயிற்சி செய்து குளித்து
எனக்காக காத்திருப்பார்
எம் ஜி ஆர்...
நான் சென்றதும்
இருவரும் அருகருகே
அமர்ந்த பின்பு தான்...
அவரது அம்மா
எங்கள் இருவருக்கும்
காலைச் சிற்றுண்டியைப்
பரிமாறுவார்...
நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி
அதற்குள் அண்ணனுக்கு
பசி எடுத்து விட்டால்...
" அம்மா...
எனக்குப் பசிக்கிறது "
என்று சொல்லுவார்...
அதற்கு
" இரு...
கணேசன் வரட்டும் "
சேர்ந்து சாப்பிடலாம் "
என்பார் சத்யா அம்மா...
நாங்கள் இருவருமே
தாய்ப்பாசத்தில் அதிகப் பற்று
கொண்டவர்கள்...
தாய் சொல்லை
தட்டாதவர்கள்...
தாயை தெய்வமாக
மதிப்பவர்கள்...
தெய்வீக நட்பு
எங்களுடையது...!!!
நன்றி🙏💕
வணக்கம் 🙏
ஜெய்ஹிந்த் 🇮🇳






















