• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

இலங்கை

பொலன்னறுவை – பக்கமுன வீதியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை நோக்கி பயணித்த வேனை காட்டு யானைத்தாக்கியதில், குறித்த வாகனமானது நிலைத்தடுமாறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், வேனின் சாரதியான 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாச் சென்ற சிலரை இறக்கிவிட்டு, பயணிக்கும்போதே குறித்த இளைஞன் இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

விபத்தினால், வேன் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணைகளை பக்கமுன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply