• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். இளைஞனிடம் 15 இலட்சம் ரூபாய் பண மோசடி – ஒருவர் கைது

இலங்கை

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது  பாதிக்கப்பட்ட இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்றைய தினம் மீள கையளிப்பதாகவும், மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதனயடுத்து அவரைப்  பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
 

Leave a Reply