• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்

இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது” விளையாட்டுத்துறையில் உலகளவில் சாதனை படைத்த பலர் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

21 ஆம் திகதியின் பின்னர் இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். விளையாட்டுத்துறைக்கான தேசிய கொள்கைதிட்டம் ஒன்றை உருவாக்குவோம்.

ஆட்சிக்கு வந்து மிகவும் குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் அதனை நடைமுறைப்படுத்துவோம். பாடசாலை வலய மட்டத்தில் மாகாண மட்டத்திலும் தேசிய சர்வதேச மட்டத்திலும் விளையாட்டுத்துறையில் உள்ள திறமைசாலிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதுமாத்திரமல்ல தேசிய விளையாட்டு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply