• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாவலப்பிட்டியில் துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த இளைஞர் மீது தாக்குதல்

இலங்கை

துண்டுப்  பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையொன்றில் வைத்தே நேற்று முற்பகல் குறித்த  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,  உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பான  காணொளிக் காட்சிகள்   அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV  கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளதோடு, இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியதன் பின்னர் இன்று (16) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply