• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்

இலங்கை

தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நமக்காக நாம் பிரசாரப்பணிகளில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகாமிட்டுவருகின்றனா்.

தமிழ் மக்களின் திரட்சி கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்று வடகிழக்கில் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

தென்பகுதியிலிருக்கு தென்பகுதி வேட்பாளர்கள் அங்கு பிரசாரம் செய்வதை காணமுடியவில்லை.

அவர்கள் இப்போது வடகிழக்கில் முகாமிட்டுள்ளனர் என்றால் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கு ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் திரட்சியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.அவர்களை நாங்கள் இனி சிதறடிக்கமுடியாது என்று என்னை வேட்பாளராக நிறுத்திய பின்னர் அவர்கள் அச்சமடைகின்றார்கள்” என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மேலும்  தெரிவித்தார்.
 

Leave a Reply