• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் தொடர்பில் மீண்டும் அறிவிப்பு

இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்ததாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்

எவ்வாறாயினும், இதுவரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத ஒருவர் இருப்பின் நாளை முதல் தேர்தல் நாள் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a Reply