• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலில் நீராடச்சென்ற மாணவன் மாயம்

இலங்கை

கல்கிஸ்ஸைக் கடற்கரையில் நீராடச் சென்ற 17 வயதான மாணவரொருவர் நீரில் மூழ்கிக்காணாமற் போயுள்ளார்.

கல்கிஸ்ஸை, அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் தனது நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்றுள்ள நிலையில் இவ்வாறு மாயமாகியுள்ளார்.

குறித்த மூவரும்  நீராடிக்கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை  மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமற்போன மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply