• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொறன்ரோவில் சாரதி மீது கத்தி குத்து தாக்குதல்

கனடா

ரொறன்ரோவில் சாரதி மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டாக்ஸி சாரதி ஒருவர் மீது இவ்வாறு கத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோவர் செர்ப்ரோன் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

25 முதல் 30 வயது மதிக்கத் தக்க கறுப்பின நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply