• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டு – வாகரையில் சூறாவளி

இலங்கை

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது.

வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக காயம் ஏதுவுமின்றி உயிர்தப்பியுள்ளனர் . சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.

இந்த மினி சூறாவளி காற்றினால் 12 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என அவர்; தெரிவித்தார்.
 

Leave a Reply