• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

இலங்கை

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிகவும் மோசமாகப்  பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களே
இந்த அவலநிலையை எதிர்கொண்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அவசர முதலுதவிக்கான வழிமுறைகளை மருத்துவக் குழுக்கள் வழங்கியுள்ளதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ளதால் அவர்களை மீட்க மற்றொரு கப்பலை கடலுக்கு அனுப்ப போதிய கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அவர்களை அருகில் உள்ள கப்பலில் ஏற்றி கரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

படகு இலங்கை கடற்கரையில் இருந்து 320 கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply