• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவிற்கு போரினால் இதுவரை ரூ.3700 கோடி செலவு: செனட் சபையில் கடும் விவாதம்

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 3700 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபையில் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் விவசாயிகளுக்கான உதவி மற்றும் வாக்களிப்பு சட்ட மாற்றங்களுடன் ராணுவ நிதியை உள்ளடக்கிய, குடியரசுக் கட்சியின் முன்மொழியப்பட்ட 95 பில்லியன் டாலர் பட்ஜெட் தொகுப்பின் போது, ஹெக்ஸெத் மீது செனட் சபையினர் குற்றம்சாட்டினர்.

செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் பேசிய அவர், ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இந்தக் கூடுதல் நிதி அவசியம் என்று கூறி, நிர்வாகத்தின் அவசரகாலப் பாதுகாப்புச் செலவினக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார்.

இதுகுறித்து மேலும் கூறிய ஹெக்ஸெத், “இந்தக் கூடுதல் போர் நிதி என்பது அவசரமான, அவசியமான நிதித்தேவையாகும். டிரம்ப் முன்மொழிந்த 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதிநிலை அறிக்கை என்பது, ராணுவத்தில் செய்யப்படும் ஒரு தலைமுறைக்கான முதலீட்டைக் குறிக்கிறது.

இந்த நிதிகள் இல்லாமல், நாங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பென்டகனின் வளங்களை மீண்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட, அதிபர் டிரம்பின் 87.6 பில்லியன் டாலர் கூடுதல் நிதிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து, ஜனநாயகக் கட்சியினர் நிதிக் கோரிக்கையின் அளவு மற்றும் நிர்வாகத்தின் பரந்த உத்தி ஆகிய இரண்டின் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதுகுறித்து மூத்த செனட் உறுப்பினர் பாட்டி முர்ரே கூறும்போது, அமெரிக்கா மற்றொரு முடிவில்லாப் போரில் நுழையும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.

மேலும், இந்தப் போர் இப்போது மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. ஒரு உடன்பாடு நெருங்கிவிட்டது என்றும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் 40 முறைக்கு மேல் எங்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது, அவர் கூடுதலாக 70 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கேட்கிறார். மேலும் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என்று அவரை நம்பும்படியும் கூறுகிறார்” என்றார்.

இந்நிலையில் விசாரணைக்கு முன்னதாக, பட்ஜெட் தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி உடனடியாக அங்கீகரிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தி வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
 

Leave a Reply