• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்

இலங்கை

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply