பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை
இலங்கை
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் 30 ம் திகதிக்கு முன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது
தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுசெயலாளர் சுப்பையா கமலதாசன் சுகாதார திணைக்களத்திற்கு வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைப்பாடுகள் குறித்து மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்திற்கு முன்கொண்டு, சென்றதை அடுத்து வந்த பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா பிராந்திய பணிப்பாளரை எதிர்வரும் 30.05.2026 க்கு முன்பதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு நாள் ஒன்றுக்கு 500கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவிற்கும் மாதாதாந்த சிகிச்சையினை பெற்றுக்கொள்ளவும் சமுகம் தருகின்றனர்.
பொகவந்தலாவ பகுதியில் அவரசர தேவையினை கருதி. சுமார் 05கிராமசேவகர் பிரிவுகளை சார்ந்த மக்களுக்கு இந்த வைத்தியசாலை பயனுள்ளதாக காணப்படுகிறது.
அன்மை காலங்களில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் பல வசதிகளுடன் புணரமைக்கப்பட்டுகாணப்படுகிறது இவ்வாறு இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலையில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த மாதங்களில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நோயாளர்கள் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது






















