குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது drone தாக்குதல்
குவைத் பெட்ரோலியக் கழகத்தால் இயக்கப்படும், அல் அஹ்மதியில் அமைந்துள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆளில்லா விமானம் (drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக, குவைத்தின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களின் விளைவாக, "பல செயல்பாட்டுப் பிரிவுகளில்" தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், ஆனால் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து அவசர மீட்பு மற்றும் தீயணைப்புப் படைகள் சம்பவ இடத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை குவைத் மீது "எதிரிகளின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்" நடைபெற்று வருவதாக, அரசு செய்தி நிறுவனத்தின் 'X' தளத்தில் வெளியிடப்பட்ட முந்தைய பதிவு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
























