இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி - பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
இலங்கை
கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது எக்ஸ் கணக்கில் நன்றி தெரிவித்தார்.
அந்தச் செய்தியில் ஜனாதிபதி அநுர,
நாம் அனைவரும் விரும்பும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ததற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு
அவர்களுக்கு நன்றி.
கொழும்பில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
போட்டியின் இணை விருந்தினராக, இலங்கை ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறது.
பாதுகாப்பு கவலைகள் காரணமாக பலர் விலகியிருந்த நேரத்தில், 1996 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் கொழும்பில் விளையாடிய போது அவர்கள் காட்டிய ஒற்றுமையை இலங்கை மறக்கவில்லை – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணப் போட்டியானது எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















