• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இலங்கை

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக, இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கை மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இன்றைய தினம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி தாதுக்கள் மக்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுவதன் மூலம் இந்த விசேட தினம் மேலும் சிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புனித தெவ்னிமோரி தாதுக்களை ஏந்திய இந்திய விமானம் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையுடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும், புத்த பெருமானின் ‘புனித தெவ்னிமோரி தாதுக்கள் தரிசனம் இன்று கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது.
 

Leave a Reply