அந்த காரணத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை நிறுத்தும் சன் டிவி - ரசிகர்கள் ஷாக்
சினிமா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துமே விறுவிறுப்பான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும், அடுத்து என்ன அடுத்து என்ன ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைக்கும் ஒரு தொடராக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். கதை ஆரம்பிக்கும் போது பெண்கள் எழுச்சிக்கான ஒரு கதைக்களம் என்று தான் கூறப்பட்டது, ஆனால் கதை அப்படி அமையவில்லை.
என்ன தான் குணசேகரனை அவரது வீட்டுப் பெண்கள் எதிர்த்தாலும் அவரை பெண்களால் ஜெயிக்கவே முடியவில்லை, கதை இப்போது வரை அப்படி தான் இருக்கிறது. குணசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தும் அதில் இருந்து எப்படியோ வெளியே வந்துவிட்டார்.
ஆனால் பெண்கள் ஒரு முயற்சி எடுத்து வளர அத்தனை பிரச்சனைகள் காட்டப்படுகிறது இந்த தொடரில், இதனாலேயே பல பெண்கள், இந்த தொடர் பெண்களுக்கான கதை இல்லை, ஆண்கள்-வில்லன்கள் ஜெயிக்கும் கதை.
பெண்கள் எழுச்சி என்று கூறி பெண்களை மோசமாக காட்டுகிறார்கள் என நிறைய விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
குண்டாஸ் வழக்கில் இருந்து வெளியே வந்த குணசேகரன் வீட்டிற்கு வந்து மீண்டும் தனது வேலைகளை தொடங்கிவிட்டார். தம்பிகளை தூண்டிவிட்டு அவர்களது மனைவியை வீட்டைவிட்டு அனுப்ப விவாகரத்து கொடுக்க பேச வைக்கிறார்.
கடைசியாக இந்த பிரச்சனையில் தான் கதைக்களம் முடிந்தது, அடுத்த வாரம் எப்படிபட்ட கதைக்களம் அமையும் என தெரியவில்லை.
இந்த நிலையில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. தினமும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாக தினசரி மறுஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது மறுஒளிபரப்பிற்கு டிஆர்பி மிகவும் குறைந்துள்ளதால் அதனை நிறுத்த சன் டிவி முடிவு செய்துள்ளதாம். வரும் பிப்ரவரி 2 முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது மறுஒளிபரப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.






















