யாழில். கார் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்
இலங்கை
யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன் – மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் நேற்று வடமராட்சி நோக்கி தமது காரில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது .
விபத்தில் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் , அச்சுவேலி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.























