நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு
இலங்கை
நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி பொலிசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது
ஊர்காவற்றை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சான்று பொருளாக துப்பாக்கி இன்று ஊர்காவற்றுறை போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்























