இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி
இலங்கை
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவு இப்போது இத்தாலிக்கான இலங்கை தூதருக்குத் தெரிவிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, இத்தாலியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






















