பி.பி.சி இயக்குநர் திடீர் ராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2021ம் ஆண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி தவறுதலாக எடிட்டிங் செய்து ஒளிபரப்பியது வன்முறையை துாண்டும் விதமாக அமைந்தது.
இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., நிறுவனம் மீது டிரம்ப் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, பி.பி.சி., செய்தி பிரிவு இயக்குநர் டிம் டேவி மற்றும் தலைமை செய்தி பிரிவு நிர்வாகி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.
தற்போது, இந்திய வம்சாவளி தொழில்நுட்ப முதலீட்டாளரான சுமித் பானர்ஜி, பி.பி.சி.,யில் நிர்வாகம் சாரா இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.






















