இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
சினிமா
1960களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் பலரும் பாடல்களை எழுதியிருந்தாலும் அதிக பாடல்களை எழுதியது கவிஞர் கண்ணதாசனும், வாலியும்தான்.
எம்.எஸ்.வியின் இசையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
எம்.ஜி.ஆருக்கு அவரின் அரசியல் தொடர்பான பல பாடல்களை வாலி எழுதி இருந்தாலும் சிவாஜிக்கு அவர் எழுதிய பாடல்களும் சாகா வரம் பெற்றவைதான்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வாலி ‘
சிவாஜிக்கு நான் பல பாடல்களை எழுதி இருந்தாலும் ‘
அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’
பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.
.. அந்த பாடலின் சரணத்தில் வரும்
‘இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல.. மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல..இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல.. இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல’
என்கிற வரிகளை அவர் சிலாகித்து பேசுவார்.
என்னை எப்போது பார்த்தாலும் ‘வா வாத்தியாரே’ என சொல்லி இந்த பாடலை பாடித்தான் என்னை வரவேற்பார்\ என வாலி சொல்லி இருந்தார்.
பொதுவாக சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல ஹிட் பாடல்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1964இல் நடிகர் திலகத்துடன் இணையும் வாய்ப்பு கவிஞர் வாலி க்கு கிடைத்தது
அன்று முதல் 80 படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். அனேக பாடல் ஹிட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது
அன்பு கரங்கள் படத்தில் இடம் பெற்ற
ஒண்ணா இருக்க கத்துக்கணும் அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
இந்தப் பாடலை குறிப்பிட்டு சொல்லலாம்.






















