ஸ்ரேயா சரண் பெயரில் நடக்கும் மோசடி - நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்
சினிமா
கடந்த 2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் எனக்கு 20 உனக்கு 18.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சரண், 2ம் நாயகியாக வந்திருப்பார். பின் மழை படத்தில் நீ வரும்போது என்ற பாடலில் நடனம் ஆடி மக்களை கவர்ந்தார்.
அப்படத்தை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது என்றே கூறலாம்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண் ஒரு பரபரப்பு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு மக்களை ஏமாற்றும் வேலை நடப்பதாக பதிவு செய்துள்ளார். அதில் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு மக்களை ஏமாற்றும் வேலை நடப்பதாக பதிவு செய்துள்ளார்.
மற்றொருவரை போல நடிக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கையை பாருங்கள். போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார் என தெரியவில்லை என நடிகை ஸ்ரேயா காட்டம்.























