பணிமனை திறப்பு விழாவில் டிராம் வண்டி ஓட்டிய மன்னர் சார்லஸ்
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.
இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.
அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.






















