• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து

இலங்கை

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் ஓகேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலிகல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் இப்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சாலையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

தற்போது, 13 மாணவர்கள் பெலியத்த, பெலிகல, தங்காலை மற்றும் வீரகெட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

Leave a Reply