யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர்
டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்க வெளியிடாத நிலையிலும், இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது.
முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்க விலகியது.






















