
வரும் 8ம் தேதி முதல் ஃபெப்சி ஒத்துழைப்பு தராது- ஆர்.கே.செல்வமணி
சினிமா
வரும் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களுக்கு ஃபெப்சி ஒத்துழைப்பு தராது என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " திரைப்பட துறையில் ஒற்றுமையில்லை. பிரச்சனையை தவிர்க்கும் வகையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஃபெப்சி அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மலையாள சினிமா துறை போல VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.