• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

நாட்டில் கடந்த 13ஆம் திகதி முதல் நிலவி வரும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  மேலும் உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் இதுவரை  27, 751 குடும்பங்களைச் சேர்ந்த 92, 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை,  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அண்மைய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56, 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply