SLPP இன் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரம் நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம்
இலங்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆரம்ப நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புனிதமான அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி விஹாவை மற்றும் ருவன்வெலிசேயாவிற்கு விஜயம் செய்து ஆசீர்வாதம் பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரையும் இந்த குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, SLPP தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்தும்.





















