• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெல் அவிவ் முழுவதும் சைரன்கள் - பாதுகாப்பு இடத்தை நோக்கி ஓடும் மக்கள்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட கொடிய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவு நாளில் இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து தரையிலிருந்து மேற்பரப்பு ஏவுகணைகள் வீசப்பட்ட பின்னர் டெல் அவிவ் உட்பட மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் எதிரொலித்தன. ஏவுகணையை யார் வீசினார்கள் என்று இஸ்ரேல் குறிப்பிடவில்லை, ஆனால் ஈரான் ஆதரவு ஹூதிகள் - ஏமனில் உள்ள ஒரு ஷியா போராளிக் குழு - கடந்த ஒரு வருடத்தில் காசாவில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையாக இஸ்ரேலை பல முறை தாக்கியுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோவில் சைரன் ஒலித்ததுடன் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளியும் காட்சி காண்போரை கவலை அடைய செய்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வான்வழித் தாக்குதல் தொடர்பான சைரன்கள் ஒலிக்கும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் பலர் தரையில் படுத்து உள்ளனர்.

இதனிடையே, ஓராண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ராக்கெட்டுகளில் இருந்து தஞ்சம் புகுந்தவர்களின் படத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.

சைரன்கள் ஒலித்த இடங்களின் வரைபடத்தையும் IDF பகிர்ந்துள்ளது. ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய இஸ்ரேலில் உள்ள அனைத்து இடங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply